திருச்சி மாநகராட்சி பொதுப் பூங்காக்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறது

ஒவ்வொரு பூங்காவிற்கும் அவற்றின் அளவைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹20,000 முதல் ₹50,000 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது
திருச்சி மாநகராட்சி நகரில் உள்ள பொதுப் பூங்காக்களை பராமரிப்பதில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பின்வாங்குவதன் காரணத்தினால் சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு பவுல்வர்டு சாலையில் உள்ள இப்ராகிம் பூங்கா, ஸ்ரீரங்கத்தில் உள்ள காந்தி பூங்கா, ( தற்போது பேருந்து முனையத்தை அமைப்பதற்காக மூடப்பட்டுள்ளது) மற்றும் கண்டோன்மெண்டில் உள்ள பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா ஆகியவை நகரின் பழமையான பூங்காக்களாக இருந்து வருகின்றன. அவை முந்தைய திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் நகராட்சிகளில் உருவாக்கப்பட்டதாக இருந்து வருகிறது.
திருச்சி மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 325 பொதுப் பூங்காக்கள் தற்போது இருந்து வருகின்றன.
ஆனால் பூங்கா திறக்கப்பட்டதில் இருந்து பராமரிப்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. பூங்காக்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நிர்வாகம் தெளிவான கொள்கை இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த பூங்காக்களை உருவாக்குவதற்கு கணிசமான நிதியை முதலீடு செய்தாலும் அவற்றின் பராமரிப்புக்கு போதுமான நிதியை மாநகராட்சி ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தாலும், அவற்றை பராமரிக்க சில அமைப்புகள் மட்டுமே இருந்து வருகின்றன. அண்ணாநகர், மேற்கு பவுல்வர்டு சாலை, கண்டோன்மென்ட், கே.கே.நகர் உள்ளிட்ட சாலைகளில் உள்ள பொதுப் பூங்காக்கள் தவிர பெரும்பாலான பூங்காக்கள் தற்போது வரை முறையான பராமரிப்பு இன்றி இருந்து வருகின்றன.
புதிதாகக் கட்டப்பட்ட பூங்காக்கள் அனைத்தும் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குள் பழுதுபார்க்கும் கருவிகள், பழுதடைந்த சுவர்கள் மற்றும் பிறவற்றைப் பழுதுபார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பெரும் ஒதுக்கீடு தேவைப்படுவதால் இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க மாநகராட்சி சார்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மேயர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுப் பூங்காக்களை தானாக முன்வந்து பராமரிப்பை மேற்கொண்டன. இருப்பினும், பொறுப்பை ஏற்கும் நிறுவனங்களை அடையாளம் காண்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. பூங்காக்களை இயக்கவும் பராமரிக்கவும் மாநகராட்சியுடன் கைகோர்க்க தனியார் நிறுவனங்களுக்கு நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb