திருச்சி மாரீஸ் மேம்பால பணி தாமதத்திற்கு மத்திய அரசே காரணம்- மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் குற்றச்சாட்டு…!

மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து செய்யப்படுகிறது. மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் குறுக்கே இருப்பு பாதை குறுக்கிடும் பகுதியில் ரயில்வே நிா்வாகத்தால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, ரயில்வே பணிகளுக்காக பாலத்தின் இருபுறமும் மேற்கொள்ளப்பட்டு சாலைப் பணியை நிறுத்தக் கோரியுள்ளனா்.
இருபுறமும் 20 அடி தொலைவுக்கு ரயில்வே பணிகளுக்கான வாகனங்கள் வந்து செல்ல இடம் கேட்டுள்ளனா். ஆனால், ரயில்வே தரப்பில் பூஜை மட்டுமே நடைபெற்றுள்ளது. பணிகள் தொடங்கவில்லை. தாமதத்திற்கு ரயில்வே நிா்வாகமும், மத்திய அரசுமே காரணம். மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரயில்வேக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் பணிகளை முடிப்பதாக கூறியுள்ளனா் என்றாா் அவா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....