காவேரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் இந்த ஆண்டுக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடுத்த ஆண்டு 2026-ல் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.

திருச்சி காவிரி பாலம் அருகே மற்றொரு புதிய பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2024-25-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சுமார் 106 கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த பாலம் கட்டுமான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இவ்வாறு இருக்கும் நிலையில் ஆற்றில் நீர் இருப்பு அதிகரித்ததால் பணிகளை முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை மேட்டூர் அணை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறையும். ஏழு மாத காலம் காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டுமான பணிகளை அனைத்தும் முழுவீச்சில் செயல்படுத்த முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக புதிய பாலம் கட்டுமான பணிகள் காவிரி ஆற்றின் நடுவே கிரேன் உதவியுடன் ஆற்றல் மணல் குவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக புதிய பாலம் கட்டுமான பணிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவிரி பாலத்திற்கு பிரம்மாண்ட தூண்களுக்கு கீழே வலுவாக பிடித்துக் கொள்ள கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய பாலமானது 540 மீட்டர் நீளமும், 17.75 மீட்டர் அகலமும் 15 பிரம்மாண்ட தூண்களுடன் 16 டெக்குகளுடன் இந்த பாலம் கட்டப்பட இருக்கிறது. காவிரி ஆற்றில் நீர் இருப்பு குறைய தொடங்கி இருப்பதால் இந்த பாலம் கட்டுமான பணிகள் அனைத்தும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலமானது 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் அடுத்த 2026 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb