பஞ்சப்பூர் -கரூர் சாலையில் திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை திட்டம் ஆனது விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

ஏற்கனவே இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சார்பிலும் அரசு முதன்மைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் கரூர் சாலை வரை கோறையார் மற்றும் உய்யக்கொண்டான் ஆறுகளின் கிழக்கு கரைப்பகுதியில் மூன்று பகுதிகளாக புறவழிச்சாலை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்காக முதற்கட்டமாக பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டப்பணி பகுதி 1 சுமார் 81.72 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த சாலை பஞ்சப்பூரில் தொடங்கி கரூர் சாலை வரை 9.9 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாக பஞ்சப்பூரில் இருந்து கருமண்டபம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த சாலை அமைப்பதற்கு டெண்டர் விடும் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb