திருச்சி மாநகராட்சி 54 குப்பை இடங்களை பசுமை இடங்களாக மாற்றியுள்ளது. இதை வரவேற்ற அப்பகுதி மக்கள், புற வார்டுகளிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

நகரின் திடக்கழிவு மேலாண்மை நிறுவனமான S R வேதா மூலம் ஐந்து மண்டலங்களில் 150 குப்பை இடங்களை அடையாளம் கண்டுள்ளது. 
பெரும்பாலான குப்பை கொட்டும் இடங்கள் மின்சார டிரான்ஸ்பார்மர் போஸ்ட்கள், தொலைபேசி பெட்டி சந்திப்புகள் மற்றும் தெரு முனைகளில் காலி இடங்கள் ஆகியவை ஆகும் 

குப்பைகளை அகற்றிய பிறகு, குப்பை போடுதல் அல்லது திறந்தவெளி சிறுநீர் கழிப்பதையோ தடுக்க நகர்ப்புற உமாநகராட்சி, அந்த இடத்தில் வண்ணம் தீட்டவும், அலங்கார செடிகளை நட்டு, கழிவுகளிலிருந்து கலை கண்காட்சிகளை நிறுவி வருகிறது. ஒரு இடத்திற்கு 5,000 முதல் 15,000 வரை செலவழிக்கிறது.

உறையூரில் உள்ள பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே சுத்தம் செய்யும் பொழுது, ​​குப்பையில் கற்களால் ஆன பாதுகாவலர் சிலை இருப்பதை துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்தனர். மாநகராட்சி அதை மீட்டு அங்கு மீண்டும் நிறுவியது.

திருச்சி மாநகராட்சியும் வணிகப் பகுதிகளில் திடக்கழிவு சேகரிப்பை ஒரு நாளைக்கு ஒரு முறையிலிருந்து மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. மாநகராட்சி சரி செய்த இடத்தை உறுதி செய்வதற்காக சில இடங்களின் நிலையை மதிப்பாய்வு செய்து வருகிறது.

"சாலைகளில் மக்கள் கழிவுகளை கொட்டுவதை தடுக்க கடைகளுக்கு அருகில் தொட்டிகளை வைக்குமாறு கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு வார்டில் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் மாற்றப்பட்ட குப்பை இடங்களின் நிலையை அறிய புகைப்படங்களை சமர்ப்பிப்பார்கள்" என்று எஸ்ஆர் வேதாவின் செயல்பாட்டுத் தலைவர் கிஷோர் மோகன் கூறினார். மேலும், மாநகராட்சி கமிஷனர் சரவணன், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குப்பை கொட்டும் இடங்களின் நிலையை ஆய்வு செய்து வருகிறார்.

புற வார்டுகளில் வசிப்பவர்கள் இந்த இயக்கத்தை பாராட்டினாலும், கே.கே.நகர், திருவானைக்கோயில் மற்றும் மன்னார்புரத்திலும் இதேபோன்ற முயற்சிகளை அவர்கள் கோருகின்றனர். "நெடுஞ்சாலைகள் அருகே உள்ள காலி இடங்கள் மற்றும் காலி மனைகள் குப்பைகளாக உள்ளன. முக்கிய நகர பகுதிகளில் உள்ள குப்பைகளை மட்டும் மாநகராட்சி அதிக கவனம் செலுத்துகிறது," என்று சில குடியிருப்பாளர் கூறினார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb