திருச்சி மாவட்ட வனத்துறையினர் நடத்திய ஆய்வில் துறையூர் அருகே உள்ள பச்சமலை மலையில் பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 15 இனங்கள் மற்றும் 2022 இல் 109 இனங்களில் இருந்து, டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மலைகளில் 126 இனங்கள் கண்டறியப்பட்டன.

இந்த ஆய்வை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (TNBS) நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூர், சென்னை, சேலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்று இருந்தனர்.

இந்த ஆய்வானது பச்சமலையில் செங்காட்டுப்பட்டி விரிவாக்க ஆர்.எப், காளியம்மன் கோவில் திட்டு ஆர்.எப், சோலைமத்தி ஆர்.எப், கன்னிமார் சோலை ஆர்.எப், மேலூர் ஆர்.எப், சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா பகுதி (மேல் செங்காட்டுப்பட்டி) மற்றும் மங்களம் அருவி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள் உலர் மற்றும் ஈரத் தன்மை கொண்ட இலையுதிர் காடுகளாக இருந்ததால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆறுகள் பாயும் காடுகள் மற்றும் இரண்டாம் நிலைக் காடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வு 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துறையூர் வன அலுவலகம் மற்றும் அதன் அலுவலர் சரவணன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் அனைத்தும் தமிழ்நாடு வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Banded Royal (Rachana jalindra) எனப்படும் பட்டாம்பூச்சி வகை இனம் பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டின் கிழக்கு மலைப்பகுதிகளில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படும் நீலம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பட்டாம்பூச்சி இனம் ஆகும். இது இந்திய வனப்பாதுகாப்பு சட்டம், 1972ன் அட்டவணை 2-ல் இடம்பெற்று சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது திருச்சி பச்சமலையில் காணப்பட்டது மேலும் ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கணக்கெடுக்கப்பட்ட 126 இனங்கள் கீழ்க்காணும் 6 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை: 37 நீலன்கள் (Blues): 35 ,2 (Metalmarks): 1 தாவிகள், துள்ளிகள் (Skippers): 26 அரிய வகை பட்டாம்பூச்சிகளான பருபலா வெள்ளையன்காட்டுக்களா சிறகன், நான்கு வளையன், சிறிய பரப்பி, , சிறிய மஞ்சள் புல்வெளியாள், ஜூடி, (Swallowtails): 9 புல்வெளியாள்கள், நுனிச்சிறகன்கள், வெள்ளையன்கள் (Whites & Yellows): 18 வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் (brush-footed Butterflies):போன்ற இனங்கள் மலைப்பகுதிகளில் பரவலாக காணப்பட்டன.

நீல அழகி, மயில் அழகி, மஞ்சள் அழகி, நாடோடி, கருப்பு நாடோடி, கண்ணாடி வரியன், ஆரஞ்சு வரியன், ஆமணக்கு சிறகன், வெண்கருப்பு சிறகன், சாம்பல் மின்னி, நாமத்தாவி, மற்றும் வயல் துள்ளி போன்ற பட்டாம்பூச்சிகள் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்பட்டன. ஆற்றுப் பகுதிகளில் இரட்டை வால் சிறகன் மற்றும் அந்திச்சிறகன் போன்ற பட்டாம்பூச்சிகள் மரத்தில் இருந்து வடியும் பாலை உண்ணும் காட்சிகள் பதிவானது.

பச்சை மலையில் 2016 மற்றும் 2022-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முறையே 105 மற்றும் 109 இனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது மொத்தமாக 149 பட்டாம்பூச்சி இனங்கள் பதிவாகி உள்ளது. மேலும் தொடர்ச்சியாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சுமார் 175 இனங்கள் வரை பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட வண அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb