2024-11-18
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி: அமைச்சர் நேரு தகவல்

திருச்சி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு கிருமி தொற்று கண்டறிவதற்கான புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏழு நாட்களில் முடிவு தெரிந்து கொள்ளும் வகையில், கிருமி தொற்று கண்டறியும் ஆய்வகம் இருந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தின் வாயிலாக, நான்கு மணி நேரத்தில் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நிதி நிலையை அறிந்து, இந்த ஆண்டிற்குள் கல்லுாரிகளை கொண்டு வர அனுமதி பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments