திருச்சி பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ்ரோடு மீட்பு கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வீஸ் ரோடு விரைந்து அமைக்க வேண்டி இந்த கூட்டமைப்பு பல்வேறு அறப்போராட்டங்கள் நடத்தியும் முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேஎன் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களையும் சந்தித்தும் சரி சாலை அமைப்பதாக உறுதி கூறுகிறார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தமிழக முழுவதும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வியாபார கூட்டமைப்பின் அழுத்தத்தினாலும், பணபலத்தினாலும் ஆட்சியாளர்கள் சர்வீஸ்ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

தொடர்போராட்டங்களுக்குப் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காதபட்சத்தில் பணிகள் காலதாமதம் ஆவதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக பொது நலவழக்கு தொடரப்பட்டு, நாளைய தினம் விசாரணைக்கு வருவதாகவும் அந்த வழக்கு விசாரணையை பொறுத்து அடுத்தகட்டமாக, தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb