திருச்சியில் 3 சட்டதிருத்தங்களை எதிர்த்து மாபெரும் பேரணி; தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் வைகோ எம்.பி ஆதரவு

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்களை திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அன்றைய நாள் முதலே தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் இந்த சட்டம் அமலானதுமுதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
அதே போல திருச்சி நீதிமன்றம் முன்பு 1 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும், 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், 3 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஆகியவற்றை வழக்கறிஞர்கள் நடத்தினர். இந்த நிலையில் இன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜாக் இணைந்து நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முதல் உழவர் சந்தை மைதானம் வரை பேரணியாக சென்று உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டமானது தொடர்ந்து நடைபெறுகிறது.
வழக்கறிஞர்களின் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்து விட்டு சென்றார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HPjZpwnd79T8IWzIKDkm8k