2024-07-07
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…!

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு ஆண் பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் 718 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்ததையும், 95 கிராம் 24 K தங்கம் சங்கிலி வடிவில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டறிந்தனர். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.54 லட்சத்து 36 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments