மாவட்ட வன அலுவலர் எஸ். கிருத்திகா கூறுகையில், "தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் 89 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் வசதி, பாதுகாப்பு போன்ற பல வேலைகள் நடந்துள்ளன. இதனால் நிறைய பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

டாப் செங்காட்டுப்பட்டியில் 51.11 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு 'A-Frame Eco Huts' கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்து பார்த்தால் மலை ரொம்ப அழகாக தெரியும். மங்கலம் அருவியில் 10 லட்சம் ரூபாயில் கைப்பிடிகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. கோரையாறு அருவியில் 800 மீட்டர் தூரத்துக்கு கல் படிகள் மற்றும் குளிக்கும் இடம் 16 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. டாப் செங்காட்டுப்பட்டி பக்கத்தில் இருந்த பழைய பங்களா 11.9 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மரத்தின் மேல் இருக்கும் வீடுகளையும் சரி செய்யப்போகிறார்கள்.

இங்கு அடிக்கடி வரும் மக்களும், ஊர் மக்களும் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI