ஆண்டியப்பன், 70. இவர், நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், தச்சமலை வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

இரவு நேரமாகியும், அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடினர் அப்பொழுது தச்சமலை வனப்பகுதியில், ஆண்டியப்பன் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டனர்.

இது குறித்து, துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட வனத்துறையினர், காட்டு மாடு தாக்கி, ஆண்டியப்பன் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb