முசிறி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறவழிச் சாலை

இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலை துறை மூலம் திருச்சி முதல் நாமக்கல் வரை செல்லும் சாலையில் உமையாள்புரம் பகுதியில் தொடங்கி தொடர்ந்து முசிறி தண்டலை புத்தூர் செல்லும் சாலை, முசிறி துறையூர் செல்லும் சாலை, முசிறி செல்லும் சாலை போன்ற மூன்று சாலைகளை இணைக்கும் வகையில் உமையாள்புரம் செவந்திலிங்கபுரம், முசிறி கிழக்கு, எம் புதுப்பட்டி மேற்கு , எம் புதுப்பட்டி கிழக்கு, போன்ற பகுதிகளை வழியாக முசிறி நகரப் பகுதியை தாண்டி கொக்குவெட்டியான் கோவில் அருகில் முடியும் படியான புதிய புறவழிச்சாலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதற்கான நில அளவீடு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. 9.3 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த புதிய புறவழிச்சாலை அமைய இருக்கிறது. இந்த புறவழிச்சாலை அமைக்க சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் அனைத்தும் செய்யப்பட இருக்கின்றன.
இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சுமார் 74 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த புறவழிச் சாலையில் சுமார் 8 பாலங்கள் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாலங்கள் அனைத்தும் கட்டப்பட இருக்கும் இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணி மற்றும் பாலம் அமைவிடம் குறித்து வரைபடம் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகிறது
அவ்வாறு இந்த புறவழிச்சாலை திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....