2024-12-07
வேலைவாய்ப்பு
0 Comments
0 Likes
மாரீஸ் மேம்பாலம் கட்டுமான பணிகள் மெதுவாக நடப்பதால் மக்கள் கடும் அவதி!

திருச்சி மாநகரில் பிரதான சாலையாக மாரீஸ் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது போக்குவரத்து மாற்றத்தால் தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி வழியாக மக்கள் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
அதே சமயம் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் அந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு மாநகராட்சியும், ரயில்வே துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments