டைடல் பூங்கா பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

பஞ்சப்பூரில் சுமார் 315 கோடி ரூபாய் செலவில் 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு சார்பில் டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட இருக்கிறது.
இதில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் அமையும் இந்த டைடல் பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு தற்போது ஒப்பந்தம் கோரி இருக்கிறது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடர்பாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு இந்த டைடல் பார்க் முலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....