திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சபூரில் சுமார் 40 ஏக்கரில் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பயணிகளுக்கு கூடுதல் வசதியாக ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து நிலையத்தின் முகப்பில் கருணாநிதி சிலை அமைக்க கூடுதல் நிதி தேவைப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் ஆலோசனைப்படி திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூபாய் 99 கோடி கூடுதல் நிதி கேட்டு மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் 43 கோடி ரூபாய் ஜிஎஸ்டி உள்பட 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் 142 நீண்ட நேரம் பேருந்துகள், 124 புறநகர் பேருந்துகள், 78 குறைந்த நேர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 404 பேருந்து நிறுத்த தடங்களும், மேல்தளத்தில் 60 டவுன் பஸ்களும் இயக்கக்கூடிய அளவுக்கு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வணிக பயன்பாட்டிற்காக அங்கு 70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புறநகர் பஸ்களுக்கு இரண்டு இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள் வருவாயை பெருக்கிட வணிக நிறுவனங்களை விளம்பரம் செய்ய 3 d டிஜிட்டல் முறையில் அகன்ற திரை மற்றும் பஸ்களின் கால அட்டவணைகள் இடம் பெற்றுள்ளது. பேருந்துகளின் வருகை குறித்து அறிவிக்க ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டம் என்பதால் அதற்கு ஏற்ப முகப்பு பகுதி கட்டப்பட்டு வருகிறது. தற்போதைய மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் கண்டறியப்பட்ட ஆங்காங்கே மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுகிறது
தற்போது இந்த பேருந்து முனையத்தில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, இண்டீரியர் வேலைகள் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல முடிவுற்ற தயார் நிலையில் உள்ள கனரக வாகன நிலையத்துக்கு அண்ணாதுரை பெயர் வைக்கப்பட இருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் இந்த மாத கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....