திருச்சியில் டைடல் பார்க் மற்றும் ஒலிம்பிக் அகாடமி ஆகிய இரண்டு முக்கிய திட்டங்கள்!

வருவாய்த்துறை சார்பில் கூறப்பட்டதாவது, 268 ஏக்கர் நிலமானது திருவெறும்பூரில் சூரியூர் பகுதியில் மத்திய அரசிடம் நிறுவனத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனை திரும்பப்பெறப்பட்டது. இதில் 50 ஏக்கர் நிலம் இலந்தைப்பட்டியில் ஒலிம்பிக் அகாடமிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் அகாடமியில் 24 விளையாட்டுகள் பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. அகடாமிக் வளாகத்துடன், அட்மின் கட்டிடமும் அமைக்கப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாடுவதற்கு மைதானமும் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன் வீரர்கள் வீராங்கணைகள் தங்குவதற்கு தனித்தனியாக ஹாஸ்டலும் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் டைடல் பார்க் தொடர்பாகவும், டெண்டர் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதி செய்யப்படும். இந்த மாதத்திற்குள் அந்தப்பணிகள் அனைத்தும் நடைபெறும். இது இறுதி ஆனதும் இந்த ஆண்டுக்குள் பணிகள் அனைத்தும் தொடங்கப்படும்.
இந்த டைடல் பூங்காவானது 14 ஏக்கர் நிலப்பரப்பில் பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு அருகில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 5.5 சதுர அடி பரப்பளவில் தனியாக 2 டவர்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் டவரானது 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....