திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேரத்தில் விரைவில் ரயில் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தாா்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சியிலிருந்து காணொலி காட்சி மூலம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பங்கேற்றாா்.

இதையடுத்து ரயில்வே மேலாளா் அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பணியாளா்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவகையில் பழைய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை தோ்வு செய்யலாம். ஒரு முறை தோ்வு செய்து விட்டால் மறுபடி வேறு திட்டத்துக்கு செல்ல முடியாது. திருச்சி -பெங்களூரு தடத்தில் பகல் நேரத்தில் ரயில் விரைவில் இயக்கப்படும் என்றாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb