திருச்சி-தஞ்சாவூர் மக்களுக்கு ஆபர்களை அறிவித்த வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க்!

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பட்டியில் வாண்டையார் குழுமத்தின் சார்பில் வொண்டர் வேர்ல்ட் எனும் தீம் பார்க் ஆனது கடந்த மே மாதம் திறக்கப்பட்டது.
இவ்வாறு இருக்கும் நிலையில் வொண்டர் வேர்ல்ட் தீம் பார்க் ஆனது பல்வேறு ஆபர்களை அறிவித்துள்ளது.
இந்த தீம் பார்க்கானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் டிக்கெட் கவுண்ட்டர்கள் 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கிற்கு வெளியில் இருந்து உணவுகள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 700 ரூபாயும், முதியவர்களுக்கு 60 மேல் உள்ள முதியவர்களுக்கு 600 ரூபாயும் , குழந்தைகளுக்கு 90 சென்டிமீட்டர் முதல் 140 சென்டிமீட்டர் வரை 600 ரூபாயும், 90 சென்டிமீட்டருக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆபர் என்னவென்றால் பள்ளிக்கூடம், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வருபவர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பல்வேறு ஆபர்கள் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வரும் மக்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வொண்டர்வேல்ர்ட் தீம் பார்க்கில் இருந்து கல்லணை அணை, தஞ்சாவூர் ராயல் பேலஸ், ஸ்ரீரங்கம் கோவில், பிரகதீஸ்வரர் பெரிய கோவில், சனீஸ்வரன் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், வேளாங்கண்ணி, நவகிரக கோவில்கள் அனைத்திற்கும் செல்லலாம்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....