திருச்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

சூரியூர், இலந்தைப்பட்டி இடங்களில் ஆய்வு செய்தனர். விரைவில் பணிகள் அனைத்தும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 225 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும் இதன் மூலம் 3000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி அருகே சிப்காட் அமைய இருக்கும் இடமான திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூர் மற்றும் இலந்தைப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். திருச்சி மாவட்டத்தில் அமைய உள்ள சிப்காட் இடங்களை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளதால் விரைவில் இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HPjZpwnd79T8IWzIKDkm8k