பஞ்சப்பூர் முதல் மன்னார்புரம் இடையிலான பகுதியை மின்விளக்குகள் பொறுத்த மாநகராட்சி திட்டம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) திருச்சி மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு அதிக மக்கள் வருவதாலும், இந்த சாலையில் விபத்துகள் அதிகரித்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வரை பஞ்சப்பூரில் நடந்த சாலை விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆவர்.
மன்னார்புரம் மற்றும் பஞ்சப்பூர் இடையே உள்ள 6 கி.மீ தூரப் பகுதியில் பல இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில், மின்விளக்குகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி முன்மொழிந்தது. மாநில அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கான ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....