பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இரவு, பகலாக நடைபெறுகின்றன.

திருச்சி மாநகரில் இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை புகா்ப் பகுதிக்கு கொண்டு செல்ல 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற முயற்சி, திமுக ஆட்சி அமைந்த பிறகே கை கூடியது. பஞ்சப்பூரில் 40.60 ஏக்கா் இடம் பேருந்து முனையத்துக்கு ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு முதல் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகின்றன.
விடுபட்ட மற்றும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள திருத்திய நிா்வாக அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் தொடா்கின்றன.
தைப் பொங்கலுக்குப் பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு நேரில் வந்து இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே, பணிகளை டிசம்பருக்குள் முடிக்கும் வகையில் இரவு, பகலாக பணிகள் நடைபெறுகின்றன. முதல்வா் வருகை தேதி உறுதியான பிறகு பேருந்து முனையம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....