பொங்கல் பண்டிகைக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்க திட்டம்

பொங்கல் பண்டிகைக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்க திட்டம்
பொங்கல் பண்டிகைக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் மத்திய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக சுமார் 40 ஏக்கரில் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் அனைத்தும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் 142 நீண்ட தூரம் போகும் பேருந்துகள், 124 புறநகர் பேருந்துகள், 78 குறைந்த தூரம் போகும் பேருந்துகள் என ஒரே நேரத்தில் 404 பேருந்துகளை நிறுத்தும் வசதியும், மேல்தளத்தில் 60 டவுன் பஸ்களும் இயக்கக்கூடிய அளவுக்கு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வணிக பயன்பாட்டிற்காக அங்கு 70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புறநகர் பேருந்துகளுக்கு இரண்டு இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் எளிதாக டிக்கெட் பெற முடியும். மாநகராட்சி வருவாயை பெருக்கிட வணிக நிறுவனங்களை விளம்பரம் செய்ய 3d டிஜிட்டல் முறையில் அகன்ற திரை மற்றும் பஸ்களின் கால அட்டவணைகள் இடம் பெற்று இருக்கும். பேருந்துகளின் வருகை குறித்து அறிவிக்க ஆங்காங்கே ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
இந்த பேருந்து முனையமானது கடந்த டிசம்பர் மாதமே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவு பெறாததால் தள்ளிப்போனது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....