பயணிகள் கவனத்திற்கு! திருச்சி செல்லும் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்...!

ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக திருச்சி செல்லும் விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.....
காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (எண்: 06888) நவ.13 முதல் நவ.21 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் நவ.13 முதல் நவ.21 வரையும், விழுப்புரம் - திருச்சி மெமு விரைவு ரயில் நவ.12 முதல் நவ.21 வரையும் பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நவ.13 முதல் 21-ஆம் தேதி வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி -விழுப்புரம் மெமு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை பொன்மலையிலிருந்து இயக்கப்படும். திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை திருவெறும்பூரிலிருந்து இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் நவ.11 முதல் நவ.21 வரை திருச்சி கோட்டையிலிருந்து இயக்கப்படும்.
பாதை மாற்றம்: ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா -திருநெல்வேலி விரைவு ரயில் நவ.14-ஆம் தேதியும், காச்சிக்கூடா-நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் நவ.17-தேதியும் திருச்சி வழியாக செல்வதற்கு பதிலாக கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....