திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் என்ஜினில் திடீர் புகை ஏற்பட்ட பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு இன்று 06880 எண் கொண்ட பாசஞ்சர் ரயிலானது காலை 08:25 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் டெமோ ரயில் முன்பக்கம் இஞ்சினோடு பின்பக்கம் இன்ஜினையும் சேர்த்து மொத்தம் எட்டு பெட்டிகளுடன் சென்றது. இந்த ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் 09:00 மணிக்கு இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

அப்பொழுது திடீரென ரயில் என்ஜினில் இருந்து கரும் புகை வெளியேற தொடங்கியது. என்ஜினில் இருந்து கரும் புகை அதிகளவு வெளியேறியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரயில் என்ஜின் பகுதியில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர், உடனடியாக என்ஜின் பகுதியில் இருந்து வெளியே இறங்கினார். உடனடியாக ரயிலில் இருந்த பயணிகளை வெளியேறும்படி ஓட்டுநர் கூச்சலிட்டதை தொடர்ந்து பயணிகள் சுதாரித்து வெளியேறினர்.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்து இன்றி தப்பினர். தொடர்ந்து ரயிலில் வந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பயணிகள் ரயில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள், அதே வழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து திருச்சி காரைக்கால் பயணிகள் ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து ரயில்வே போலீசார், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb