திருச்சியில் ரயில் விபத்து போன்று செட்டிங்! தெற்கு ரயில்வே நடத்திய ஒத்திகையால் பரபரப்பு !

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை விரைவாக செயல்பட்டு எப்படி காப்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டது போன்று தண்டவாளத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பொதுமக்கள் சிறிதுநேரம் பரபரப்படைந்தனர். அதன்பிறகு தெற்கு ரயில்வே சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிந்ததும் நிம்மதிப்பெருமூச்சுடன் கலைந்து சென்றனர். இயற்கை பேரிடர் மற்றும் ரயில் விபத்துகளின் போது, பயணிகளை மீட்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை மற்றும் பெருநகரப் பேரிடா் மீட்புப் படையை சோ்ந்த 400 போ் கலந்து கொண்டனர். காலை 9 மணியிலிருந்து தொடா்ந்து மதியம் 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சிக்காக ரயில் விபத்து நடைபெற்றது.
விபத்து ஏற்பட்டது போன்று பெட்டிகள் அமைக்கப்பட்டன. பின்னா் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மீட்பு பணியாளா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பயணிகளை மீட்கும் அவசர கருவிகளுடன் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்று ஒத்திகை மேற்கொண்டனா்.
தொடா்ந்து விபத்தின்போது பணியாளா்கள் மற்றும் அவசர கால பொருள்களை திரட்டுதல், விளக்குகள் அமைத்தல், தடம் புரண்ட பெட்டியில் இருந்து பயணிகளை மீட்டல், அவசர கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், காயமடைந்தவா்களுக்கு முதலுதவி வழங்குதல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து அனைத்துதுறை பணியாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....