பயணிகளை இறக்கி விட ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் - திருச்சி எம்.பி பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், விமான நிலைய இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் நிறைவடைந்த உடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், விமான நிலைய இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கம் தொடர்பாகவும் பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஓடுதள பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பயணிகள் உடன் வருபவர்களுக்கு கழிவறை வசதி போதுமான வகையில் இல்லை அதை அமைத்து தர வேண்டும் என்பது பற்றியும் நான் கூறினேன். இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோக்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே பயணிகள் மற்றும் பயணிகளுடன் வருபவர்களின் வசதிக்காக தற்பொழுது பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மூன்று பேருந்துகள் சேவை அங்கிருந்து இயக்கப்படுகிறது. வரும் காலத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடவாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....